கண்ணீர் அஞ்சலி – சபாரத்தினம் பரராசசிங்கம்

ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும், கொம்மந்தறையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சபாரத்தினம் பரராஜசிங்கம் (துரை சவுண்ட் உரிமையாளர்) அவர்கள் 19/03/2026 அன்று காலமானார். உடுப்பிட்டி வடக்கு, கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் ஆலயத்தில் தர்மகர்த்தா சபை தலைவராக கடமையாற்றியுள்ளார்.

  • அன்னார் காலஞ்சென்றவர்களான சபாரத்தினம்,பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மகனும்
  • காலஞ் சென்றவர்களான கந்தையா, குட்டிப்பிள்ளை ஆகியோரின் மருமகனும்,
  • பூமணியின் அன்பு கணவரும்,
  • சுதாஸ், சுஜந்தினி( ஆசிரியர்) அன்பு தந்தையும்,
  • இரட்னேஸ்வரி (கனடா), ராஜேந்திரம்(லண்டன்),இலங்கேஸ்வரி (ஜேர்மனி), விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்பு சகோதரும்,
  • காலஞ் சென்றவரான அழகதுரை, நல்லையா(கணித ஆசிரியர்) மற்றும் பூபதி, தவமணி (ஜேர்மனி), தங்கராசா (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்
  • கிருஸ்ணவேணி, கண்ணதாசன் (பிரதேச சபை உறுப்பினர்) ஆகியோரின் மாமானாரும்
  • மதுமிதன், கபின் ராஜ்,சுபானி ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரியை நாளை (20/03/2026) காலை 9:00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று ஊரிக்காடு மயிலியதனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்