அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, இரத்தினபுரி, எஹலியகொட மற்றும் அயகம பகுதிகளுக்கு இரண்டாம் நிலை ‘அம்பர்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், களுத்துறை மாவட்டத்தின் மத்துகம, புலத்சிங்கள பகுதிகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹுபிடிய, தெஹியோவிட்ட, தெரணியகல, ருவன்வெல்ல, யட்டியந்தோட்டை பகுதிகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பகுதிக்கும் முதல் நிலை ‘மஞ்சள்’ எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தின் கிரியெல்ல, பெல்மதுல்ல, நிவித்திகல, எலபாத மற்றும் கலவான பகுதிகளுக்கும் முதல் நிலை நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.