ஆவரங்கால் சர்வோதய சன சமூக நிலையத்தின் புதிய நிர்வாகத் தெரிவு 08.042026 அன்று 7.30 மணியளவில் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிர்வாகத் தெரிவானது வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தி.நிரோஷ், வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை உறுப்பினர் தவராஜசிங்கம் மற்றும் சன சமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது.
தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாகம் வருமாறு:-
- தலைவர் – ம.நித்திலன்
- உப தலைவர் – ம.பவீந்திரன்
- செயலாளர் – சி.ஜெயானந்தன்
- உப செயலாளர் – கு.அகிம்ஷன்
- பொருளாளர் – ச.கஜீவன்
- போசகர் – க.கற்கண்டு
- கணக்காய்வாளர் – யோ.செந்தூரன்
- நிர்வாக உறுப்பினர்கள் – க.கார்த்திகேயன், அ.சிங்கராசா, சி.தர்மராசா, த.அஐந்தன், ச.சர்மிலன், த.நிகாஷன், த.சந்திரவதனா, தே.டசிர்தா, த.நிகாஷினி, அ.கார்திகாஜினி, சி.றௌசிகா, இ.கீர்த்தனா.
இக்கூட்டத்தில் சர்வோதய சன சமூக நிலைய உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
