பட்டம் பெற்ற துரைராஜா அருண்குமார் (BA)

யாழ். பல்கலை கழகத்தில் நடைபெற்ற 40 வது பட்டமளிப்பு விழாவில் 21.02.2026 அன்று பட்டம் பெற்ற துரைராஜா அருண்குமார் (BA) அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பார்வை இல்லாத நிலையிலும், உறுதியான மனவலிமையும் விடாமுயற்சியும் கொண்டு அவர் இந்த உயரத்தை அடைந்துள்ளார்

தடைகள் அவரை தடுக்கவில்லை, அவை அவரை மேலும் வலிமையாக்கின.
இன்று அவர் பெற்ற பட்டம், அவரது திறமை மற்றும் நம்பிக்கையின் வெற்றிச் சின்னம்.

அவரின் எதிர்காலம் மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள். அத்துடன் இவர் புலமைப்பரிசில் பரிட்சையில் 163 புள்ளிகளையும் , உயர்தர ப்பரிட்சையில் 3A களையும் பெற்றார் என்பது குறிப்பிடதக்கது

அதேபோல் 21.02.2026 அன்று பட்டம் பெற்ற சக்திவேல் கிருத்தியன் (BA), மற்றும் இன்று 21.02.2026 பட்டம் பெற்ற சுதானந்தம் சுபாங்கி (B.Com), செந்தில்நாதன் விஷ்னிஜா (B.Com) ஆகியோருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகள்.

உங்கள் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் இன்று வெற்றியாக மலர்ந்துள்ளது.
இது உங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான மைல்கல் மேலும்
உங்கள் எதிர்காலம் வளமும் வெற்றியும் நிரம்பியதாக இருக்க வாழ்த்துகள்!

இவர் மணல் தெரு கம்பர்மலை இல் வாழ்ந்துவரும் திரு கிட்டினப்பிள்ளை அவர்களின் மகன் என்பதும் குறிப்படத்தக்கது. செல்வன் அருண் பார்வை அற்ற போதும் இத்தகைய பட்டதாரி படிப்பில் பட்டம் வாங்கி இருப்பது மிக மிக பாராட்டத்தக்கவை, எமது ஊருக்கே பெருமை தேடித்தந்த இவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் ஊரும் உறவும் சார்பாக தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.