புத்தாண்டே புத்துயிர் தந்திட வா

புத்தாண்டே புத்தாண்டே
பூமுகம் கொண்டு வா
புதுயுகம் படைக்க வா
வஞ்சமில்லா மழையோடு வா
வயலால் வம்சம் செழித்திட வா
வற்றாத மகிழ்ச்சியை தந்திட வா
வறட்சியில்லா விடியல் படைத்திட வா
வக்கிரமற்ற அன்பைப் பொழிய வா
வாட்டமில்லா வசதி செய்திட வா
துரோகமில்லா நட்பு தொடர்ந்திட வா
நச்சுயில்லா பாசம் படர்ந்திட வா
வசந்தமான வாழ்வு வளமாக்கிட வா
வீழாத தர்மம் நிலைத்திட வா
வன்முறையைத் துவம்சம் செய்திட வா
வறுமையின் நிறம் மாற்றிட வா
களவில்லா கருணை பரப்பிட வா
இயற்கை கொலையில்லா
காலத்தைப் படைத்திட வா
புத்தாண்டே புத்துயிர் தந்திட வா
இரா.பாலாஜி

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *