கடுகு எண்ணெய் பயன்கள் என்ன?

எந்த எண்ணய் நல்ல எண்ணெய் என்று கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.பெரும்பாலான நோய்களுக்கு அன்றாடம் உபயோகப்படுத்தும் எண்ணெயும்ஒரு காரணம் என்கிறார்க ள் நாம் அதிகம் பயன்படுத்தாத கடுகு எண்ணெயில் ஆரோக்கியம் கூடுதலாக இருக்கிறது. இனி உங்கள் சமையலிலும் கடுகு எண்ணெய் மணக்கட்டும்.அன்றாடம் சமைக்கப்படும் உணவில் பயன்படுத்தப்படும் எண்ணெய் உடலுக்கு கேடு விளைவிக் காமல் இருக்க வேண்டும். இதில் உண்டாகியிருக்கும் அதிகப்படியான விழிப்புணர்வு காரணமாக கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தவிட்டு எண்ணெய், கடுகு எண்ணெய் போன்றவை மீண்டும் முன்பைவிட வேகமாக உயிர்த்தெழுந்திருப்பதைக் காணலாம். அந்த வகையில் கடுகு எண்ணெயின் பயன்களை இப்போது பார்க்கலாம்.

கடுகு எண்ணெய்

கடுகு விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் இந்த கடுகு எண்ணெய் தனிச்சுவையைக் கொண்டது. பழங்காலத்தில் சமையலறையில் கடலை எண்ணெய், நல்லெண்ணெயோடு கடுகு எண்ணெயும் முக்கியமாக இடம் பிடித்திருந்தது.

இந்த எண்ணெய் பார்ப்பதற்கு சிவந்த நிறத்தில் இருக்கும். அன்றாடம் நமது உடலுக்கு 3:1 என்ற விகிதத்தில் எண்ணெய் தேவைப்படுகிறது. அவற்றை அளவாக பயன்படுத்தினாலும் அந்த எண் ணெய் சத்துகள் உடலுக்கு நன்மையை அளிக்க வேண்டும். ட்

மாறாக கெட்ட கொழுப்பின் அளவை அதிகரித்துவிடக்கூடாது. அந்த வகையில் உங்கள் சமையல றையில் கடுகு எண்ணெயும் வைத்திருங்கள்.இது ஆரோக்கியத்தையும் அழகையும் சேர்த்து கொடுக்கும்.

கடுகு எண்ணெயில் ஒமேகா 3, வைட்டமின் ஈ ,பி 6 சத்துகள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக் கின்றன. இவற்றில் 6 0 சதவீதம் மோனோசாச்சுரேட் கொழுப்பு அமிலம் இருக்கிறது. மேலும்21 சதவீ தம், பாலி அன்சாச்சுரேட் அமிலங்கள் நிறைந்திருக்கிறது.

இந்த சத்துகள் எல்லாமே நம் ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்வதில் முக்கிய பங்கு வகிக்கி றது. உடலுக்கு நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க செய்வதிலும் கடுகு எண்ணெய் துணைபுரி கிறது. ஆரோக்கியம் மற்றும் அழகு குறித்த பராமரிப்புகளிலும் கடுகு எண்ணெயில் இருக்கும் சத்துகள் துணைபுரிகிறது.

செரிமானத்தை எளிதாக்கி பசி உணர்வை தூண்டுகிறது

பெரும்பாலான நோய்களுக்கு காரணமே செரிமானக் கோளாறுதான்.உண்ணும் உணவு எளிதில் செரிமானமாகும் போது பசி உணர்வும் இயல்பாகவே தூண்டப்படுகிறது. கடுகு எண்ணெய் பயன் படுத்தும்போது செரிமான பாதையில் இருக்கும் தொற்றுகளை நீக்கி செரிமானத்தைத் தூண்டு கிறது.

அவ்வபோது ஜீரணக்குறைபாட்டால் மந்தமாக இருப்பவர்கள் கடுகு எண்ணெயில் சமைத்த உணவு பயன்படுத்தும்போது செரிமானத்தை துரிதமாக்குகிறது. இதனால் பசி உணர்வும் தூண்டப்படுகி றது. செரிமானக்கோளாறால் மந்த சோர்வு பிரச்சனையை தீர்க்க உதவுகிறது கடுகு எண்ணெய்.

இதயத்துக்கு நல்லது

உடலில் இருக்கும் உறுப்புகளின் சீரான செயல்பாட்டுக்கு கெட்ட கொழுப்புகள் உடலில் சேரவிடக் கூடாது. குறிப்பாக கெட்ட கொழுப்புகள் அதிகரிக்கும் போது அவை இதயத்தைப் பதம்பார்த்து விடு கிறது.

கடுகு எண்ணெயில் மேனோசேச்சுரேட் மற்றும் பாலிசேச்சுரேட் கொழுப்புகள் இருக்கிறது. இவை உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்கிறது. இதில் ஒலிக் மற்றும் லினோ லெனிக் அமிலம் லினோலிக் அமிலத்துக்கிடையே சமநிலையில் இருக்கிறது. இவையும் இதயத்துக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.

கடுகு எண்ணெயை உயர்ந்த வெப்பநிலையில் சமைக்கும் போதும் அதன் குணம் மாறுவதில்லை. ஆய்வு ஒன்றில் கடுகு எண்ணெயைப் பயன்படுத்துபவர்களுக்கு இதய நோய் சம்பந்தமான பாதிப்பு குறிப்பிட்ட அளவில் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

சருமப்பராமரிப்பிலும் கடுகு எண்ணெய்

இதில் இருக்கும் வைட்டமின் ஈ சத்து சருமத்துக்கு இயற்கை சன்ஸ்க்ரீனாக விளங்குகிறது. சரும துவாரங்களில் இருக்கும் அழுக்கை வெளியேற்ற வியர்வை சுரப்பிகளைத் தூண்டி இறந்த செல் களை வெளியேற்றி சருமத்தைப் பொலிவாக்க உதவுகிறது.

சருமத்துக்கு ஆயில் மசாஜ் செய்யும் போது ஆலிவ் ஆயில், பாதாம் ஆயில் போன்று கடுகு எண்ணெ யும் பயன்படுத்தலாம். சருமத்தை மிருதுவாக்கி நாளடைவில் சருமத்தில் நல்ல நிறமாற்றத்தையும் அளிக்கிறது.

கூந்தல் உதிர்வு பிரச்சனை இருப்பவர்கள் கடுகு எண்ணெயும் தேங்காய் எண்ணெயும் கலந்து மசாஜ் செய்வதால் தலையில் இருக்கும் பொடுகை விரட்டி கூந்தலுக்கு போஷாக்கு தருகிறது.வெகு குறைந்த நாளில் கூந்தல் உதிர்வைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது கடுகு எண்ணெய்.

ஆயுர்வேத மருத்துவத்தில் உடலுக்கு மசாஜ் செய்ய இதைப் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப் பிடத்தக்கது.சருமத்துக்கு பொலிவையும் மினுமினுப்பையும் கொடுக்கிறது.

சைனஸ் பிரச்சனைக்கு தீர்வு

சளி மற்றும் இருமல் பாதிப்பு உண்டாகும் போது கை வைத்தியத்துக்கு இதைப் பயன்படுத்தலாம். சுவாசக் குழாயில் இருக்கும் அடர்த்தியான சளி இருக்கும் மூச்சு விடுதலில் சிரமம் இருக்கும். சளி யை இளக்கி வெளியேற்ற கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

கடுகுஎண்ணெயை இலேசாக சூடாக்கி குழந்தைகளுக்கு மார்பில் தடவுவதன் மூலம் சளி கரைந்து வெளியேற்றுகிறது. சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் பூண்டு தட்டி, சிட்டிகை கிராம்பு பொடியைச் சேர்த்து கடுகுஎண்ணெயில் கலந்து இலேசாக சூடாக்கி மார்பு, காலில் தேய்த்துவந்தால் சைனஸ் பிரச்சனை குறையும்.

குறிப்பாக மழை மற்றும் குளிர்காலங்களில் மிகவும் கை கைகொடுக்கும் கைவைத்தியம் என்றும் சொல்லலாம். காய்ச்சலைக் குறைக்கவும். உடலில் தசைகளில் உண்டாகும் வலியைக் கட்டுப்படுத் தும் வலி நிவாரணியாகவும் கூட கடுகு எண்ணெய் உதவுகிறது.

தொற்று கிருமிகளை அழிக்கவல்லது

கடுகு எண்ணெயில் இயல்பாகவே தொற்றுக்கிருமிகளை எதிர்க்கும் பண்புகள் அடங்கியிருக்கிறது. இது கேடு தரும் பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றை எதிர்த்து அழிக்கும் ஆற்றல் கொண்டது.

நிச்சயமாக ஒரு எண்ணெயை மட்டும் தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது என்கிறார்கள் மருத்துவர் கள். ஒரே வகையான எண்ணெய் அது நன்மையே தரும் என்றாலும் அதை மட்டுமே தொடர்ந்து பயன்படுத்துவது உடல் நலனுக்கு நன்மை பயக்காது.

நல்ல சத்துகள் இருக்கும் எண்ணெயைத் தொடர்ந்து பயன்படுத்தும் போது அதில் இருக்கும் கெடு தல் பயக்கும் பொருள்கள் சிறிதாக இருந்தாலும் அவையும் குறிப்பிட்ட அளவு உடலில் சேர்ந்து கொண்டே இருக்கும். அதனால் கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், தவிட்டு எண்ணெய், ரீபைண்ட் ஆயில் என அனைத்தையும் மாற்றி மாற்றி பயன்படுத் துவதே நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *