அரிசிக்கு பதிலாக சிறுதானியம்?

அரிசிக்கு பதிலாக சிறுதானியம் சாப்பிட்டால் டைப் 2 நீரிழிவு நோய் வராமல் தடுக்க முடியுமா?

தினை சாப்பிடுவதால் டைப் 2 நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்க முடியும் என்கிறது புதிய ஆய்வு. நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த குளுக்கோஸ் அளவை நிர்வகிப்பது மிகவும் அவசியம். எனவே தினை போன்ற உணவுகளை நீரிழிவு மக்கள் எடுத்துக் கொள்ளும் போது அது இரத்த குளுக்கோஸ் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இதைத் தொடர்ந்து 11 நாடுகளில் இந்த ஆராய்ச்சியானது தொடங்கப்பட்டது. இந்த ஆராய்ச்சியில் வெளியிடப்பட்ட கருத்துப் படி தினை உட்கொண்ட நோயாளிகளின் இரத்த குளுக்கோஸ் அளவானது 12-15 சதவிகிதம் குறைந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த ஆராய்ச்சி குறித்து மேலும் விவரங்களை அறிந்து கொள்வோம்.

தினை பற்றிய ஆராய்ச்சி :

நீரிழிவு நோய்க்கு முந்தைய நபர்களுக்கு HbA1c (ஹீமோகுளோபினுடன் பிணைக்கப்பட்ட இரத்த குளுக்கோஸ்) அளவு சராசரியாக 17 சதவிகிதம் வரை குறைந்துள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது. இதனால் தினை சாப்பிடுவது ஒரு சிறந்த கிளைசெமிக் குறியீட்டுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆய்வில் வெளியிடப்பட்ட 80 ஆய்வாளர்களின் தரவுகள் மதிப்பாய்வு செய்யப்பட்டது. இதில் 65 பேர் சுமார் 1,000 மனித பாடங்களை உள்ளடக்கிய ஒரு மெட்டா பகுப்பாய்விற்கு தகுதியுடைய ஆய்வாளர்கள் என்பதும் தெரிய வந்தது. இன்று வரை இந்த பகுப்பாய்வு ஒரு மிகப்பெரிய பகுப்பாய்வாக பார்க்கப்படுகிறது என்று சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிறுவனம் (ICRISAT) தெரிவித்துள்ளது.

​டைப் 2 நீரிழிவு

இந்த நோய் பற்றிய புரிதலுக்கு இங்கே சென்று பார்வையிடலாம் https://www.oorumuravum.today/type-2-diabetes-நீரிழிவு-வகை-2/

நீரிழிவு நோயில் தினையின் பங்கு குறித்து இதுவரை யாருக்கும் தெரிந்து இருக்காது. ஆனால் இந்த ஆய்வு தினை உணவானது இரத்த குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைத்திருப்பதை நிரூபித்துள்ளது என்று சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 1990-2016 வரை நீரிழிவு நோய் மக்களுக்கு அதிகச் சுமை கொடுத்தது. இதனால் கிட்டத்தட்ட ஏராளமான மக்கள் பாதிப்படைந்தனர். நீரிழிவு தொடர்பான சுகாதாரச் செலவும் கூட 7 மில்லியன் டாலருக்கு அதிகமாக இருந்தது. எனவே நீரிழிவு நோயை கட்டுப்படுத்த வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவுப் பழக்க வழக்கங்கள் அவசியம். அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு தற்போது தனிநபருக்கும் அரசாங்கத்திற்கும் மிகப்பெரிய பங்களிப்பை கொண்டு வந்துள்ளது. இதை திட்டங்களாக செயல்படுத்த சரியான திட்டமிடல் தேவை என தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் இந்த கொரோனா கால கட்டத்தில் இரத்த சர்க்கரை நோயாளிகள் அதிகமாக கோவிட் 19 தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். எனவே நீரிழிவு நோயாளிகள் உணவில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். எனவே நமது தட்டில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சேர்க்க வேண்டும்.

நீரிழிவு நோய் தாக்கம்

சர்வதேச நீரிழிவு சங்கத்தின் கூற்றுப்படி, நீரிழிவு நோய் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் அதிகரித்து வருகிறது. இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவில் நீரிழிவு நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். 2019 முதல் 2045 வரை ஆப்பிரிக்கா 143 சதவிகிதம், மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா 96 சதவிகிதமும் மற்றும் தென்கிழக்கு ஆசியா 74 சதவிகிதமும் நீரிழிவு நோய் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக தினை வகைகளுடன் பலவகைப்பட்ட உணவுகளை சாப்பிட ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

கோதுமையும் அரிசியும் விட சிறந்தது

​கோதுமையும் அரிசியும் விட சிறந்தது

நம் முன்னோர்கள் சாப்பிட்ட மாதிரி தற்போது நாம் தினை போன்ற தானியங்களை எடுத்துக் கொள்ளும் வழக்கத்திற்கு திரும்ப வேண்டும். ஏனெனில் தினை தானிய உணவின் கிளைசெமிக் குறியீடு குறைவாக உள்ளது. தினையின் கிளைசெமிக் குறியீடு (GI) 52.7 ஆகும். இது அரைத்த அரிசி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கோதுமையை விட சுமார் 30% குறைந்த கிளைசெமிக் குறியீடு மற்றும் மக்காச் சோளத்துடன் ஒப்பிடும் போது சுமார் 14-37 GI புள்ளிகள் குறைவாக இருப்பதை ஆய்வு கண்டறிந்துள்ளது. 11 வகையான தானியங்களில் தினையின் கிளைசெமிக் குறியீடு குறைவு. கிளைசெமிக் குறியீடு 55-69 க்கு குறைவாக உள்ளது. எனவே அரிசி, கோதுமை மற்றும் மக்காச்சோளத்தை விட தினையின் கிளைசெமிக் குறியீடு குறைவு.

கர்ப்பகால நீரிழிவு

அதுமட்டுமல்ல தினை டைப் 2 நீரிழிவு நோயை தடுப்பதோடு கர்ப்ப கால நீரிழிவு நோயை குறைக்கவும் உதவுகிறது. எனவே நாடு முழுவதும் உள்ள ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் நீரிழிவு நோய் தாக்கம் இவற்றை சரி செய்ய நம் உணவு முறையை முதலில் மாற்ற வேண்டும். எனவே சத்தான தினை போன்ற தானிய உணவுகளுக்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும். நம் முன்னோர்கள் உணவுப் பழக்கத்தை நாம் மறுபடியும் பின்பற்ற வேண்டும்.

ஸ்மார்ட் ஃபுட்

இந்த ஆய்வானது 2021 இல் படிப்படியாக வெளியிடப்படும் ICRISAT தலைமையிலான ஸ்மார்ட் ஃபுட் அடிப்படையில் நான்கு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட தொடர் ஆய்வாகும். இதில் தினை உணவு பற்றியும் அது எப்படி நீரிழிவு நோய், இரத்த சோகை, இரும்புச் சத்து குறைபாடு, கொலஸ்ட்ரால், கால்சியம் குறைபாடு மற்றும் இதய நோய்கள் இவற்றை குறைக்கிறது என்பதை பற்றியும் ஆராய்ச்சி செய்யப்பட்டது. எனவே நம் உணவை ஆரோக்கியமாக மாற்ற முயற்சி செய்ய வேண்டும். இதை கூட்டு முயற்சியுடன் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *