அமரர் க.நல்லையா

பிரபல கணித ஆசிரியர் கந்தையா நல்லையா அவர்கள் காலமானார். கடந்த நான்கு தசாப்த காலமாக வடமராட்சி பிரதேசத்திலே கல்வி பொதுத்தராதர உயர்தர வகுப்புக்களுக்கு கணிதபாடம் கற்பித்து பலபொறியியலாளர்களையும், பலகணித பட்டதாரிகளையும் உருவாக்கிய கொம்மந்தறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட
கணிதபேராசான் கந்தையா நல்லையா காலமானார்.


இவர் கந்தையா குட்டிப்பிள்ளையின் அன்பு மகனும்,

செல்லப்பாக்கியம் அவர்களின் பாசமிகு கணவரும்

இரத்தினம் ஆறார்த்தப்பிள்ளை தம்பதியரின் மருமகனும்

கந்தையா அழகதுரை(அமரர்), சின்னராசா பூபதி, பரராஜசிங்கம் பூமணி, அழகலிங்கம் தவமணி(ஜேர்மனி), கந்தையா தங்கராசா(ஜேர்மனி) ஆகியோரின் சகோதரனும்,

நல்லையா பவானி(மாவீரர்) , நல்லையா வசீகரன், நல்லையா சுபாகரன்(கனடா), நல்லையா பபாகரன்(ஜேர்மனி) ஆகியோரின் தந்தையும்,

வசீகரன் சுதேஸ்வரி, சுபாகரன் மஞ்சுளாதேவி(கனடா), பபாகரன் துவேனிகா(ஜேர்மனி) ஆகியோரின் மாமனாரும்,

வசீகரன் அன்பன், வசீகரன் அபிமேனன், வசீகரன் அபிதா, சுபாகரன் குணாளன் ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் புதன்கிழமை (27/04/2022) அவரது இல்லத்தில் நடைபெற்று , 14.00 மணியளவில் அவரது பூதவுடல் மயிலியதனை இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனக்கிரிகைகள் இடம்பெறும் என்பதனை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *