மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமும் படைப்புலகமும் – [ 12 ] T.சௌந்தர்

எம் எஸ் விஸ்வநாதன் (M S Viswanathan): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா,  புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil

வெண்கலக்குரலின் அசரீரி:

தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் பெரும்பாலும் கர்னாடக இசை நன்கு தெரிந்தவர்கள் மட்டும் தான் பாட முடியும் என்றொரு நிலை இருந்தது.கர்நாடக இசை தெரிந்தவர்கள் அல்லது அதில் கொஞ்சமாவது பரீட்சயமிருந்தவர்களே நன்றாகக் பரிமளிக்கவும்  முடிந்தது.அதன் பயிற்சிக்களனாக அன்றைய நாடக மேடை இருந்தது.நாடக மேடை மட்டுமல்ல, பின்னர் முறையான இசைப் பயிற்சியும் பெற்ற ஒரு இசைக்கலைஞனாக வளர்ந்தவர் தான் சீர்காழி கோவிந்தராஜன்.

1940 களின்  சினிமாவில் கர்னாடக இசை என்பது கர்நாடக இசைக்கலந்த மென் இசையாக [ Semi Classical ] இருந்ததென்பதே உண்மையாகும்.செவ்வியலிசை தெரிந்தவர்கள் அதை அற்புதமாகப் பாடினார்கள்.1940 களில் தொடங்கிய அந்த இசைப்பாணி  1950 களின் இறுதியிலும் தொடர்ந்தது. அந்தவகையில் கர்னாடக இசையில் விதிமுறைப்பயிற்சி பெற்ற சீர்காழி கோவிந்தராஜன் தனது வெண்கலக்குரலால் தனக்கென ஓர் தனியிடத்தைப் பிடித்துக்கொண்டார்.

தமிழ் இசைவெளியில் கலந்த குரல்களை பற்றி சிந்திக்கும் போது நாடகப்பண்பாடு சார்ந்தெழுந்த குரல்கள் நம் கவனத்துக்கு வருகின்றன.அவற்றை உற்று நோக்கி கவனித்ததில் அவை தமிழ் மண்ணுக்குரிய குரல்களோ [!] என்ற எண்ணம் மேலோங்குவதை தவிர்க்க முடியவில்லை.தமிழ் நாடக மரபின் வேர்களில் துளிர்த்து வளர்ந்த குரல்கள்அவை !

அந்த மரபின் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க குரல்களாக எஸ்.ஜி.கிட்டப்பா,கே.பி.சுந்தராம்பாள், எம்.கே.தியாகராஜபாகவதர், பி.யு.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம், எம்.எம்.மாரியப்பா, திருச்சி லோகநாதன் ,எஸ்.சி.கிருஷ்ணன்,டி.எம்.சௌந்தரராஜன் என்ற வரிசையை நாம் வந்தடைவோம்.

அப்படியான தமிழ் குரலுக்கு சொந்தக்காரர் தான் சீர்காழி கோவிந்தராஜன்.சிறுவனாக பாய்ஸ் கம்பனியில் நாடகப் பயிற்சி பெற்று ,மாடர்ன் தியேட்டர்ஸ் திரைக்கம்பனியில் வளர்ந்தவர்.தனது பாடும் ஆற்றலால் ஒரு காலத்தில் அந்த நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்த ஜி.ராமனாதனால் பாராட்டு பெற்றவர்.முறையாக தமிழ் மொழியின் உச்சரிப்பு இவரது சிறப்பு.மணியோசையின் சுகம் இவரது குரல்.மங்கலமும் , வெண்கலமும் இணைந்த தனித்துவமிக்க குரல்! செவ்வியல் இசைக்கு ஏற்ற குரலும்,உயர்ந்த சுருதிகளில் அனாயசமாக பாய்ந்து செல்லும் ஆற்றல் வாய்ந்த  குரல்வளம் கொண்ட பாடகர். 

1952 ல் வெளிவந்த பொன்வயல் படத்தில்  “சிரிப்புத்தான் வருகுதைய்யா ” என்ற பாடல் மூலம் அறிமுகமாகியவர்.அதைத்தொடர்ந்து 1952 களில்  புகழ் பெற்ற இசையமைப்பாளர்களிடமும் பல இனிமையான பாடல்களை பாடினார் .

குறிப்பாக,  கம்பீரமும்,அழகும், உயர்ந்த சுருதியிலும் ,அனாயாசமான சங்கதிகளை அள்ளி வீசி, இசையமைப்பில்  மரபு மாறாத இனிமையை வகை , வகையாக கொட்டிய ஜி.ராமநாதனின் இசையமைப்பில் பல அற்புதமான பாடல்களை செவ்வியலிசை சார்ந்தும்,நாட்டுப்புறம்  சார்ந்தும் சீர்காழி  கோவிந்தராஜன்  பாடினார்.

01   சரச மோகன சங்கீதாம்கிருத    – கோகிலவாணி 1955 – சீர்காழி – இசை:ஜி.ராமநாதன்
02   வானமீதில் நீந்தி ஓடும்  – கோமதியின் காதலன் 1956 – சீர்காழி – இசை:ஜி.ராமநாதன்
03   மின்னுவதெல்லாம் பொன்னென்று எண்ணி  – கோமதியின் காதலன் 1956 – சீர்காழி + ஜிக்கி – இசை:ஜி.ராமநாதன்
04   அன்பே என் ஆரமுதே  வாராய்  – கோமதியின் காதலன் 1956 – சீர்காழி + ஜிக்கி – இசை:ஜி.ராமநாதன்
05   மாலையிலே மனா சாந்தி தந்து  – கோகிலவாணி 1955  – சீர்காழி  – இசை:ஜி.ராமநாதன்

06   பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் – சித்தூர் ராணி பத்மினி – சீர்காழி – இசை:ஜி.ராமநாதன் 

07   ஓகோ..நிலாராணி  – சித்தூர் ராணி பத்மினி – சீர்காழி – இசை:ஜி.ராமநாதன் 

08   எல்லையில்லாத இன்பத்தில்  – சக்கரவர்த்தித்த திருமகள் – சீர்காழி + பி.லீலா – இசை:ஜி.ராமநாதன் 

09   திருவே என் தேவியே வாராய்  – கோகிலவாணி  – சீர்காழி+ ஜிக்கி  – இசை:ஜி.ராமநாதன் 

10   வனமேவும் ராஜ குமாரி  -ராஜா தேசிங்கு   – சீர்காழி+ ஜிக்கி  – இசை:ஜி.ராமநாதன் 

11   மலையே உன் நிலையை நீ பாராய்  – வணங்காமுடி – சீர்காழி – இசை:ஜி.ராமநாதன்

12   காதலெனும் சோலையிலே ராதே ராதே   – சக்கரவர்த்தித்த திருமகள்  – சீர்காழி – இசை:ஜி.ராமநாதன் 

13   அன்பொளி வீசி உயிர் வரித்தாடும்    – கோகிலவாணி   – சீர்காழி – இசை:ஜி.ராமநாதன்

14   அழகோடையில் நீந்தும் இள அன்னம்     – கோகிலவாணி   – சீர்காழி + ஜிக்கி  – இசை:ஜி.ராமநாதன்  

கே.வி மகாதேவன் மற்றும் பிற இசையமைப்பாளர்களின் இசையில் சீர்காழி பாடிய பாடல்கள்:

01   அமுதும் தேனும் எதற்கு   – தை பிறந்தால் வழி பிறக்கும்    – சீர்காழி – இசை:கே.வி மகாதேவன்

02   எங்கிருந்தோ வந்தான்   – படிக்காத மேதை    – சீர்காழி – இசை:கே.வி மகாதேவன்

03  அன்னையின் அருளே வா வா    – ஆடிப்பெருக்கு    – சீர்காழி – இசை:ஏ.எம்.ராஜா 

04   சமரசம் உலாவும் இடமே    – ரம்பையின் காதல்    – சீர்காழி – இசை:டி.ஆர்.பாப்பா 

05   விழி வாசல் அழகான மணி மண்டபம்   – பெண் குளத்தின் பொன் விளக்கு  1956 – சீர்காழி + சுசீலா    – இசை:மாஸ்டர் வேணு
06   என்னை விட்டு ஓடிப்போக முடியுமா   – குமுதம்  1959 – சீர்காழி + சுசீலா    – இசை:கே.வி.மகாதேவன்  

இவை போன்ற பல புகழபெற்ற பாடல்களை சீர்காழியார் பாடினாலும் மெல்லிசைமன்னர்களின் இசையில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ,தனித்துமிக்க பாடல்களையும் பாடினார்.அவரது குரலின் ரீங்காரம் , அதிர்வு போன்றவற்றை சரியாக கணித்து அளந்தது போல பாடல்களை இசையமைத்து தமது ஆற்றலையும் சீர்காழியின்  குரலை ஆற்றலையும் வெளிப்படுத்தினார்கள்.

மெல்லிசைமன்னர்களின் படைப்பாற்றலின் முக்கிய ஒரு அம்சமாக விளங்குவது வெவ்வேறு விதமான குரல்களுக்கேற்ப,அவர்களின் குரல்,பாடும் தன்மையறிந்து இசையமைப்பது என்பதாகும்.  எந்தவிதமான குரல்களாக இருந்தாலும் அந்தந்தக் குரல்களுக்கேற்ப மெட்டமைப்பதும் அதற்கு தனித்துவமான அடையாளங்களைக் கொடுப்பதுமாகும்.

செவ்வியல் இசை சார்ந்து பாடுகின்ற முறை மறைந்து மெல்லிசை வளர்ந்த காலத்தில் செவ்வியல் இசையில் பட்டொளி வீசும் குரல்களுக்கு மௌசு குறைய ஆரம்பித்தது.அது மட்டுமல்ல கதாநாயகர்களுக்கு சில பாடகர்கள் தான் பாட முடியும் என்ற நிலையும் சில பாடகர்களுக்கான வாய்ப்புகளைக் குறைத்து விட்டிருந்தது. தமிழ் இசை மரபின் தனித்த கூறு கொண்ட குரலுக்குச் சொந்தக்காரரான சீர்காழி கோவிந்தராஜனின்   இனிய குரலை எப்படி பயன்டுத்துவது என்ற வகையில் மரபின் ரசமும் ,புதுமையின் பரிமாணமும் அறிந்த மெல்லிசைமன்னர்கள் ஏதோ ஒருவகையில் தொடர்ச்சியாக பயன்படுத்தியே வந்துள்ளனர்.மெல்லிசைமன்னர்கள் பிரிந்த போதும் ,விஸ்வநாதன் தனித்து இசையமைத்த போதும் சீர்காழியாரை தொடர்ந்து தங்கள்  இசையில் பாட வைத்துக் கொண்டிருந்தார்கள்.

மெல்லிசைமன்னர்களின் இசையில் சீர்காழியார் பாடிய சில பாடல்கள்.

01 கலைமங்கை உருவம் கண்டு   – மகனே கேள் – சீர்காழி + எம்.எல்.வசந்தகுமாரி  – இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

02  ஓடம் நதியினிலே    – காத்திருந்த கண்கள்      – சீர்காழி   – இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

03  மழை கொடுக்கும் கொடையும்    –  கர்ணன்  – சீர்காழி   – இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

04  உள்ளத்தில் நல்ல உள்ளம்    – கர்ணன்   – சீர்காழி   – இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

05  மரணத்தை எண்ணி கலங்கும்     – கர்ணன்   – சீர்காழி   – இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

06  ஆறோடும்  மண்ணில் எங்கும்    – பழனி       – சீர்காழி   – இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

07  எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்- கறுப்புப்பணம் -சீர்காழி+எல்.ஆர்.ஈஸ்வரி-இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

08  கண்ணான கண்ணனுக்கு  – ஆலயமணி – சீர்காழி + பி.சுசீலா -இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

09  தங்கச்சி சின்ன பொண்ணு  – கறுப்புப்பணம்- – சீர்காழி + பி.சுசீலா -இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

10  தேவன் கோயில் மணியோசை   – மணியோசை  – சீர்காழி  -இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

11  சிங்காரத் தேருக்கு சேலை கட்டி – இது சத்தியம்  – சீர்காழி+எல்.ஆர்.ஈஸ்வரி-இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி. 

12  வெண்பளிங்கு மேடை கட்டி  – பூஜைக்கு வந்த மலர்   – சீர்காழி+எல்.ஆர்.ஈஸ்வரி-இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி. 

13  வட்ட வட்ட பாறையில்   –  பழனி    –  சீர்காழி + சுசீலா  – இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி

14  கண்ணிலே நீர் எதற்கு  – போலீஸ்காரன் மக்கள்  – சீர்காழி+எஸ்.ஜானகி -இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி. 

15  பணமிருந்தால் போதுமடா  –  நம்ம வீட்டு லட்சுமி   –  சீர்காழி -இசை:விஸ்வநாதன் 

*** ஓடம் நதியினிலே    – காத்திருந்த கண்கள்      – சீர்காழி   – இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

ஒரு தலைக்காதலின் தத்தளிப்பை தண்ணீரில் மிதக்கும் ஓடத்தின் தளும்பலுக்கு ஒப்புவமையாக சொல்வது போல அமைக்கப்பட்ட பாடல்.முற்றுமுழுதாக பாடகரின் குரலை நம்பி அல்லது அவரின் குரலுக்கு ஏற்ப இசைமைக்கப்பட்ட பாடல்! அதனுடன் குழலையும் இணைத்து இசையின் கற்பனை எல்லைகளை இசையமைப்பாளர்கள் தொட்டுவிடுகின்றனர்.இந்தப் பாடலை வேறு ஒரு பாடகர் கற்பனையே செய்ய முடியாது.  

பல படங்களில் கதாநாயகர்களுக்கு பாட வைக்க முடியாவிட்டாலும் திரையில் பின்னணியாக ,அல்லது அசரீரியாக ஒலிக்கும் பாடல்களில் சீர்காழியாரை மிக அற்புதமாகப் பயன்படுத்தினர்.தங்களுடன் பயணித்த ஒரு அற்புதமான கலைஞரை அவரது திறமையறிந்து தம்மால் முடிந்த வாய்ப்புக்களை மெல்லிசைமன்னர்கள் கொடுத்தார்கள்.திரைக்கதைகளுக்கு ஏற்ப சில அசரீரிப் பாடல்களை மெல்லிசைமன்னர்களே இவருக்கென உருவாக்கினார்களோ என்ற எண்ணமும் எழுவதுண்டு.

16  ஒற்றுமையாய் வாழ்வதால்  – பாகப்பிரிவினை    –  சீர்காழி + எல்.ஆர்.ஈஸ்வரி -இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி. 

17  தேவன் கோயில் மணியோசை  – மணியோசை  -சீர்காழி -இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி. 

18  வேங்கைக்கு குறி வைத்து   –  பாசம்  -சீர்காழி -இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி. 

19  காற்றடிக்கும் திசையினிலே    –  திக்குத் தெரியாத காட்டில்   -சீர்காழி -இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி. 

20  நித்தம் நித்தம் மாறுகின்ற – பந்தபாசம்   –  சீர்காழி -இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி. 

21  நல்ல மனைவி நல்ல பிள்ளை  – நம்ம வீட்டு லட்சுமி   –  சீர்காழி -இசை:விஸ்வநாதன் 

22  கண்களால்   பேசுதம்மா      –  தெய்வமகன்      –  சீர்காழி  – இசை:விஸ்வநாதன்

23  மேகங்கள் இருந்து   வந்தால்  –  நான் ஆணையிட்டால்    –  சீர்காழி + சுசீலா  – இசை:விஸ்வநாதன்   

உதாரணமாக திரையில் டைட்டில் , நகைச்சுவை ,நாடகப்பாடல் ,நாட்டியபாடல் என பலவகையில் பலபாடல்களில் பயன்படுத்தினார் மெல்லிசைமன்னர் விஸ்வநாதன்.  


24  கண்ணன்  வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்   –  ராமு   –  சீர்காழி + TMS – இசை:விஸ்வநாதன் 

25  குற்றால மலையிலே     –  உயிரா மானமா     –  சீர்காழி + எல்.ஆர்.ஈஸ்வரி   – இசை:விஸ்வநாதன்

டைட்டில் ப்பாடல்  , நகைச்சுவைப்பாடல் ,நாடகப்பாடல் ,நாட்டியபாடல் என்ற வகையில் சில பாடல்கள் :  

நகைச்சுவைப்பாடலாக:


26  காதலிக்க நேரமில்லை    –  காதலிக்க நேரமில்லை   –  சீர்காழி  – இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி
27  காசிக்கு போகும் சந்நியாசி         –  ராமு   –  சீர்காழி + TMS – இசை:விஸ்வநாதன் -இசை:விஸ்வநாதன் 

நாடகப்பாடலாக :

28  சங்கே முழங்கு   – சங்கே முழங்கு      –  சீர்காழி + குழு  – இசை:விஸ்வநாதன்
29  புதியதோர் உலகம் செய்வோம்    –  சந்திரோதயம்    –  சீர்காழி + TMS – இசை:விஸ்வநாதன்.

டைட்டில்பாடலாக :

30  வரப்புயர் நீர் உயரும்    –  பழனி    –  சீர்காழி   – இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி 

31  வெற்றியை நாளை சரித்திரம்     –  உலகம் சுற்றும் வாலிபன்    –  சீர்காழி  – இசை:விஸ்வநாதன் 
32  நீங்கநல்லாயிருக்கணும்     –  இதயக்கனி     –  சீர்காழி + TMS – இசை:விஸ்வநாதன் 

இதுபோன்ற பாடல்கள் மூலமும் சீர்காழி கோவிந்தராஜனை பயன்படுத்தினர்

பாடல் வகைகள் என்ற ரீதியில் பல்வேறு நிலைகளில் சின்ன ,சின்னா பாடல்களிலும் கவனம் செலுத்தினார்கள் என்பதை தொடர்ச்சியாக மெல்லிசைமன்னர்களின் இசையில் கேட்கிறோம்.சின்ன ,சின்ன பாடல்களில் மிக அருமையான பாட்டின்பங்களைத் தந்திருக்கிறார்கள்.

[தொடரும்]

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *