பொறித்த எண்ணெயை மறுஉபயோகம் செய்யலாமா??

பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதால் உடலுக்கு ஏன் ஆபத்து வருகிறது?

மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் எண்ணெயால் வரும் பாதிப்பு || Damage from  repeated using cooking oil

வீடுகளில், சமையல் செய்யும் போது ஒரு முறை பொறிக்க பயன் படுத்திய எண்ணெயை மறு உபயோகம் செய்வதுண்டு. யாரும் மனம் உவந்து அதை கீழே கொட்டுவதில்லை. தாங்கள் கற்று கொண்ட சிக்கன பாடத்தை எல்லாம் இந்த எண்ணெயை எப்படி வீணாக்காமல் உபயோகிக்கலாம் என்பதில் தான் காண்பிப்பர். இப்படி மறுபடி மறுபடி எண்ணெயை உபயோகிக்கும் பொழுது , அதனால் எவ்வளவு உடல் நலக்குறைபாடுகள் வரும் என்பதை ஒரு தடவையாவது யோசித்ததுண்டா? அப்படி எப்பொழுதும் யோசித்ததில்லை என்றால் பரவாயில்லை, காலம் தாழ்ந்து போய் விடவில்லை ,இதை படித்து விட்டு சற்றே யோசியுங்கள்!

ஒவ்வொரு தடவை சமையல் செய்யும் போதும் புதிய எண்ணெயை உபயோகம் செய்வதே நலம் பயக்கும். ஏற்கனவே உபயோகித்த எண்ணெயை மறு உபயோகம் செய்யும் போது , அதன் வாசனை , நிறம் , சுவை எல்லாமே மாறி போய் விட்டிருக்கும்!. அத்தகைய எண்ணெய் , வாசனையும், சுவையும் மாறியதோடு அல்லாமல் அதனுள் புற்றுண்டாக்கக்கூடிய (Carcinogenic free radicals) மூலக்கூறுகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.அத்தகைய எண்ணெயில் பொறிக்கும் பொழுது , அம்மூலக்கூறுகள் உணவில் உறிஞ்சப்பட்டு , யாரேனும் துரதிர்ஷ்டமான மனிதரால் உட்கொள்ள படுகிறது!

மனிதர்கள் உடம்பில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் ஆக்சிஜன் மூலக்கூறுகள்(Oxygen Molecules ), புகையிலையின் தாக்கத்தாலோ , கதிர்வீச்சாலோ , மறு உபயோகம் செய்த எண்ணெயில் பொறித்து எடுக்கப்பட்ட உணவுகளை உட்கொண்டதாலோ, மின்னேற்றம்(Electrically charged) அடைந்து விடுகிறது. அத்தகைய ஆக்சிஜன் மூலக்கூறு , தான் இழந்த மின் அணுவை(Electron )  மீட்டெடுக்க , வேற ஆக்சிஜன் மூலக்கூறுகளுடன் எதிர்வினை புரிந்து அவற்றின் மின் அணுவை திருட பார்க்கும்! இது ஒரு தொடர் விளைவு (Chain Reaction ) போல் தொடர்ந்து நடக்கும். அவ்வாறு நடக்கும் போது , நம் உடம்பில் உள்ள உயிரணுக்களுக்கு (Cells )பெருத்த சேதம் விளையும். இவையே, இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் , புற்று நோய்களுக்கும்  மூலக்காரணம்!

ஆக்சிஜெனேற்றத்தடுப்பான்(AntiOxidants ) மிகுந்த உணவு வகைகளை , நம் அன்றாடம் உட்கொள்ளும் உணவில் சேர்த்து கொண்டால் மட்டுமே, இத்தகைய பிரச்சனைகளில் இருந்து ஓரளவு தப்பித்து கொள்ள முடியும்! அதாவது வைட்டமின் A  நிறைந்த உணவுகள் ,வைட்டமின் C நிறைந்த பழங்களை தவறாமல் உட்கொள்ள வேண்டும்!

ஆனால், எண்ணெய் விற்கிற விலைக்கு , ஒவ்வொரு தடவையும் புதிய எண்ணெய் உபயோகிக்க முடியுமா என்று நீங்கள் நினைத்தால், கீழ்கண்ட குறிப்புகள் உங்களுக்கு நிச்சயம் உதவும்…
1. ஒரு தடவை உபயோகித்த எண்ணெயை பத்திரமாக சேமித்து வைப்பதற்கு முன்னே , அதை ஆற வைத்து , பின் நல்ல சுத்தமான வடி கட்டியினால் , எந்த உணவு பொருட்களும் இன்றி வடித்து , பின் சேமிக்கவும்.
2. எண்ணெயை தேவை இல்லாமல் அதிக நேரம் அடுப்பில் காய விடாதீர்கள்.
3. வேற வேற எண்ணெய்களை ஒன்றாக ஊற்றி சேமிக்க கூடாது.
4. நல்ல குழுமையான இடத்தில் எண்ணெயை சேமித்து வையுங்கள்.
5. எண்ணெயை மறுஉபயோகம் செய்து பொறிக்க நினைக்கும் போது , தாமிரத்தால் ஆன கடாயோ இல்லை இரும்பினால் ஆன கடாயோ உபயோகிக்காதீர்கள்.. ஏனெனில் அவை எண்ணெயை வேகமாக கெட்டு போக செய்யும்.

உணவுகளை 375 டிகிரி பாரன்ஹீட்(190  டிகிரி செல்சியஸ் ) அல்லது அதற்கும் மேலான வெப்பத்தில் பொறிக்கும் பொழுது , எண்ணெயில் HNE ( 4-hydroxy-2-trans-nonenal) என்ற நச்சு பொருள் உண்டாகி விடுகிறது. ஒரு தடவை எண்ணெயை பொறிப்பதற்கு உபயோகித்த உடனேயே இது தோன்றி விடும். நாம் மிச்சம் பிடிக்கிறோம் பேர்வழி என்று திரும்ப திரும்ப அந்த எண்ணெயை உபயோகிக்கும் போது HNE நிறைய உண்டாகி விடுகிறது.
பக்கவாதம்(Stroke ), பெருந்தமனி தடிப்பு(Atherosclerosis), கெட்ட கொழுப்பு(Bad Cholesterol ), அல்சைமர்(Alzheimer’s), பார்கின்சன்(Parkinson’s) மற்றும் இதர கல்லீரல் நோய்களுக்கு இந்த HNE நச்சு பொருள் தான் முக்கிய காரணம்!

சரி, இந்த HNE நச்சு பொருளை எப்படி தவிர்க்கலாம் என்று பார்க்கலாம்..
1. எண்ணெயை 375 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக காய விடாதீர்கள்.
2. எந்த எண்ணெயில் லினோலிக் அமிலம்(Linoleic Acid ) குறைவாக இருக்கிறதோ அந்த எண்ணெயை வாங்கி பொறிப்பதற்கு பயன்படுத்துங்கள். ஆலிவ் எண்ணெயில் லினோலிக் அமிலம் குறைவாக இருக்கும். சோள எண்ணெய்(Corn oil ) , சூரியகாந்தி எண்ணெய்(Sunflower oil ) போன்றவற்றில் லினோலிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருக்கும். நன்கு பொறித்த உணவை சாப்பிட விருப்பம் கொள்பவர்கள், ஆலிவ் எண்ணெயை பயன் படுத்துங்கள். சோள எண்ணெயையும் , சூரியகாந்தி எண்ணெயையும் விட்டு தூர விலகுங்கள்.

எண்ணெயில் பொறித்து எடுக்கும்போது சில விஷயங்களை நினைவில் கொள்வது அவசியம். அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

சூடான எண்ணெய் : உணவுப்பொருளை எண்ணெயில் போடுவதற்கு முன்பு, எண்ணெய் நன்றாக சூடாகியுள்ளதா என்பதை முதலில் பார்க்க வேண்டும். போதுமான சூடு இல்லாத எண்ணெயில் உணவுப்பொருளை  பொறித்தால், அது அளவுக்கதிகமான எண்ணெயை ஈர்க்கும். அந்த உணவுப்பொருளை நீங்கள் சாப்பிடும்போது, ஒன்றிரண்டுக்கும் மேலாக சாப்பிட முடியாது.

மேலும், அதிக எண்ணெய் உடலுக்கும் மிக அதிக கேடுகளை விளைவித்துவிடும். இதனால், வெப்பமானியை பயன்படுத்தி எண்ணெயின் கொதிநிலை 350 முதல் 375 டிகிரி செல்ஷியஸ் அளவில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வெப்பமானி இல்லாத சமயத்தில் உணவுப்பொருளை மிக்ஸ் செய்து வைத்த மாவின் சிறு துளியை எண்ணெயில் போட்டுங்கள். 60 விநாடிகளில் பழுப்பு நிறமாக மாறினால், எண்ணெய் பொறிப்பதற்கு தயாராக உள்ளது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

அதிகமான துண்டுகளை பொறிக்காதீர்கள் :  ஒரே சமயத்தில் அதிகமான  துண்டுகளை எண்ணெயில் போட்டு பொறித்தால், சரிவிகித அளவில் அனைத்து துண்டுகளும் வேகாமல் போக வாய்ப்ப உண்டு. ஒன்றிரண்டு துண்டுகள் வேகாமல் போவதை கண்டுபிடித்து அவற்றை தனியாக எடுத்து மீண்டும் பொறிப்பது உங்களுக்கு சிரமமாக இருக்கும். கடாயின் அளவுக்கு ஏற்ப சிறு சிறு குழுவான உணவுப்பொருளை எண்ணெயில் பொறித்து எடுக்கும்போது, அந்த பொறித்த உணவு சமமான சுவையுடன்  இருக்கும். அனைத்து உணவுப்பொருளையும் எண்ணெயில் போட்டு எடுப்பதற்கு கொஞ்சம் நேரம் ஆனாலும், சுவையும் மாறாது, கருகிபோகாமல் எடுப்பதற்கும் வசதியாக இருக்கும்.

அதிக எண்ணெய் : கடாயில் போட்டவுடன் துண்டுகள் தங்க நிறத்தில் மாறுவதை உங்களால் பார்க்க முடிந்தால், அவை நிச்சயம் எண்ணெய் அதிகமாக இருக்கும். அப்போது, எண்ணெய்யை உறிஞ்சும் தாள்களை பயன்படுத்தி, உணவில் இருக்கும் எண்ணெய்யை வடிக்கட்டி பிறகு சாப்பிடலாம். செய்தித்தாள்களை பயன்படுத்துவதை முடிந்தளவுக்கு தவிர்த்து விடுங்கள். எழுத்துக்களை அச்சிடுவதற்கு காரியம் பயன்படுத்தப்படுவதால், அவை உடலுக்குள் சென்று கல்லீரை சேதப்படுத்த வாய்ப்புகள் உள்ளன. மேலும், அவசர கதியில் வெளியே செல்ல நேர்ந்தால் சமையலுக்கு பயன்படுத்திய எண்ணெய்யை பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு, அடுப்பு அணைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்த பிறகு வெளியேறுங்கள்.

மிருதுவானஉணவுப்பொருளுக்கு: பொறிக்கும் உணவுகள் மிருதுவாக  வர வேண்டும் என நினைப்பவர்கள் அடைவகைகளை தயாரிப்பதற்கு கடைகளில் விற்பனை செய்யப்படும் பேட்டர் எனப்படும் மாப்பொருட்களின் கூட்டை பயன்படுத்தலாம். அவற்றை, நீங்கள் தயாரித்து வைத்துள்ள பஜ்ஜி அல்லது வடை மீது தடவி பொறிக்கும்போது மிருதுவான சுவையுடன் கிடைக்கும். அந்த மாப்பொருட்களின் கலவை மிகவும் மெல்லியதாக வடை மீது தடவியிருக்க வேண்டும். மாப்பொருட்களை (முட்டை, பால் ஆகியவற்றை கலந்து தயாரிப்பது) புதிதாக தயாரித்து பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

சுத்தமான எண்ணெய் :  பொறித்து தயாரிக்கப்படும் உணவுகளுக்கு சுத்தமான எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, கடலை எண்ணெய், கடுகு எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தலாம். ஆலிவ் எண்ணையை உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சுத்தமான எண்ணெயை பயன்படுத்தும்போது, உங்கள் உணவின் சுவை மேலும் கூடும். பழைய எண்ணெய்களில் உணவுகளை பொறிப்பதை கட்டாயம் நிறுத்திவது உங்களின் உடல் நலனுக்கு சிறந்தது.

சிறிய துண்டு காய்கறிகள் : அதேபோல், எண்ணெயில் வதக்கும் காய்கறிகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். ஏனென்றால், ஒரு சில நேரங்களில் பெரிய காய்கறி துண்டுகளின் உட்பகுதி வேகாமல் பச்சையாக இருக்கும். சிறிய துண்டுகளாக இருக்கும்போது முழுமையாக சமைக்கப்படுவதுடன், சுவையாக இருக்கும். முழுமையாக வேகாமல் பச்சையாக இருக்கும் காய்களை சாப்பிடும்போது, சுவை மோசமாக இருக்கும்.

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *