​காதுக்குழாயில் ஏற்படும் எரிச்சல் மற்றும் நமைச்சல்?

நம்மை அறியாமலே ஒரு நபரின் தனிப்பட்ட சுகாதாரத்தில் காது குழாய் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே காதுக்குழாய் அல்லது காது பகுதியை பற்றிய முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். ஆனால் நமது அன்றாட வாழ்க்கையில் காதுகளை பாதுக்காப்பதாக நினைத்து அதை மோசமாக்கி வருகிறோம் என உங்களுக்கு தெரியுமா? காதுகளுக்கு எதை செய்ய கூடாது என்பதையும் அதன் ஆரோக்கியத்திற்கு என்ன செய்யலாம் என்பதையும் இப்போது பார்ப்போம்.

காதுக்குழாய் என்றால் என்ன?

மிகவும் எளிமையாக கூறவேண்டும் என்றால் காது குழாய் என்பது தோல் மற்றும் எண்ணெய் இரண்டும் கலந்த கலவையாகும். இருந்தாலும் காதுக்குழாயின் செயல்பாட்டு அமைப்பானது நம் கண்களால் கூர்ந்து பார்க்க முடியாதது. காதுகளில் இருக்கும் கால்வாய் போன்ற அமைப்புதான் அதில் உள்ள அழுக்குகளை வெளியேற்றுகிறது. இதற்கு காதில் உள்ள மெழுகுகள் உதவுகின்றன.

காது மெழுகுகள் காதுகளின் உட்பகுதியில் உள்ள அழுக்குகளை வெளியேற்றவும் மேலும் காதுக்குழாயில் உள்ள செவி அறையை பாக்டீரியா, தூசிகள், அழுக்கு ஆகியவற்றில் இருந்து பாதுக்காக்கவும் உதவுகிறது. எனவே காது தன்னை தானே சுத்தம் செய்துக்கொள்கிறது.

காதுக்குழாயில் ஏற்படும் எரிச்சல் மற்றும் நமைச்சல்

காதுக்குழாய்க்கு செயல்பாட்டில் மற்றொரு நோக்கமும் உள்ளது. கண்களில் மாசு படியாமல் இருக்க கண்ணீர் உதவிப்புரிவது போல காதுகளில் அரிப்பு ஏற்படுவதை தடுக்க காதுகளிலுள்ள அபோக்ரைன் சுரப்பிகள் உள் காதுகளின் கால்வாயை உய்வூட்டுவதற்காக காதுக்குழாயில் சுரக்கின்றன. மேலும் இது காதுகளில் ஏற்படும் வறட்சி மற்றும் எரிச்சலை தடுக்கின்றன.

காதுகளை குடைய வேண்டாம்

தினமும் காதுகளை குடைபவர்களுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியான செய்தியாக தெரியலாம். ஆனால் உண்மை என்னவென்றால் உங்கள் காதுகளில் காது குழாய்கள் இயற்கையாகவே அழுக்குகளை வெளியேற்றும் பண்பு கொண்டது. நமது கீழ்த்தாடையை கொண்டு உணவை மெல்லும் போதும் பேசும் போதும் அலறும் போதும் இந்த இயக்கம் நடைபெறுகிறது. அப்போது இந்த மெழுகு அல்லது அழுக்கு காது கால்வாய் வழியாக வெளியே தள்ளப்படுகிறது. எனவே தினமும் காதுகளை குடைவது அவசியமற்ற ஒன்றாகும்.

மக்களில் அதிகமானோர் பட்ஸ் என அழைக்கப்படும் க்யூ டிப்ஸை பயன்படுத்துகின்றனர். சிலர் காதுகளை சுத்தம் செய்ய காட்டன் துணிகளை பயன்படுத்துகின்றனர். உண்மையில் இதன் மூலம் நீங்கள் உங்கள் காதுகளை சுத்தப்படுத்துவதில்லை. அவற்றை மேலும் மோசமானதாக ஆக்குகிறீர்கள். இவற்றை நீங்கள் பயன்படுத்துவதால் வெளிநோக்கி தள்ளப்படுவதற்கு பதிலாக மெழுகு அல்லது அழுக்குகள் காதுகளின் கால்வாயின் உட்புறம் தள்ளப்படுகிறது.

காது மெழுகுவர்த்தி பாதுகாப்பானதா?

காது மெழுகுவர்த்தி என்பது காதுகளில் இருக்கும் அழுக்கு அல்லது மெழுகை எடுப்பதற்கான ஒரு முறையாகும். சியாட்டலை தளமாக கொண்ட ஸ்வீடன் நியூரோ சயின்ஸ் இன்ஸ்டியூட்டின் செவிப்புலன் மற்றும் அறுவை சிகிச்சை மையத்தின் மருத்துவர்கள் இதுக்குறித்து பெரிதாக கூறவில்லை என்றாலும், அமெரிக்க ஃபெடரல் மருந்து நிர்வாகம் (எ.எஃப்.எ) இந்த முறை மூலம் அழுக்கு நீங்குகிறது என்பதற்கு உண்மையில் எந்த வித ஆதாரமும் இல்லை என கூறுகிறது. மேலும் இதன் பாதுக்காப்பு நடவடிக்கைகள் குறித்து அந்த நிர்வாகம் கவலைப்படுகிறது. உண்மையில் உங்கள் காதில் ஒரு பொருளை எரிப்பது என்பது காதுகளில் தீக்காயத்தையே ஏற்படுத்தும். மேலும் இவை காதில் உள்ள உட்புற கால்வாய்களை சிதைத்துவிடும். என்கின்றனர்.

சில நேரங்களில் காதுகளில் அடைப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படும். அவை பின்வரும் அறிகுறிகளை வைத்து வகைப்படுத்தப்படுகின்றன. காதில் மந்தமாக ஒலிகள் கேட்டல்- இது டின்னிடஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த பிரச்சனையின் போது காது வலி அல்லது உள் காது வலி ஏற்படும். செவித்திறனில் குறைப்பாடு ஏற்படும். காதில் ஒரு வகையான உணர்வு ஏற்படும்.

காது அழுக்கை பாதுகாப்பாக நீக்குவது எப்படி

நீங்கள் காது குழாயில் அடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு உள்ளாகிறீர்கள் என்றால் மாயோ கிளினிக்கின் மருத்துவர்கள் காதுக்கு மேல் சூடான துணியை பயன்படுத்த சொல்கிறார்கள். அல்லது கெட்டியான அழுக்கை தளர்வாக்க சில துளிகள் எண்ணெய் அல்லது ஹைட்ரஜன் பெராக்சைடை பயன்படுத்தலாம். ஒருவேளை காது அடைப்பு மோசமடைந்துவிட்டால் உறிஞ்சலுடன் இணைக்கப்பட்ட குரேட் (ஒரு சிறிய வளைந்த உலோக கருவி) என்னும் கருவியை பயன்படுத்தி காதுகளை சுத்தப்படுத்தவும். வெது வெதுப்பான நீரை கொண்டு ஊசியை பயன்படுத்தி உங்கள் மருத்துவரால் காதில் உள்ள அழுக்கை அகற்ற முடியும்.

காதில் அரிப்பு அகற்ற, மூலிகை சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது. சூடான கெமோமில் உட்செலுத்தலின் 2-3 சொட்டுகளை ஆரிக்கிளில் செலுத்த பரிந்துரைக்கப்படுகிறது. உட்செலுத்தப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு, காது கீழே திரும்பியது, அதனால் உட்செலுத்துதல் சுதந்திரமாக பாய்கிறது.

லாவெண்டர் எண்ணெய் மூன்று துளிகள் காலெண்டுலா (ஒரு தேக்கரண்டி) உட்செலுத்தலில் சேர்க்கப்படுகின்றன. இந்த கலவையுடன் ஒரு பருத்தி துணியால் செறிவூட்டப்பட்டு, சிறிது அழுத்தி, படுக்கைக்குச் செல்வதற்கு முன் காதில் வைக்கப்படுகிறது.

ஓட்டோமைகோசிஸ் மூலம், செலாண்டின் உட்செலுத்துதல் காதுக்குள் செலுத்தப்படுகிறது அல்லது கோடையில், காது கால்வாய் தாவரத்தின் புதிதாக அழுத்தும் சாறுடன் உயவூட்டப்படுகிறது.

கற்றாழை சாறு, பூண்டு அல்லது வெங்காயம் கிருமி நாசினிகள் பண்புகள் உள்ளன. சாற்றின் பிழிந்த பகுதி 1: 1 என்ற விகிதத்தில் சூடான தாவர எண்ணெயுடன் கலக்கப்படுகிறது மற்றும் கரைசலில் நனைத்த ஒரு துணி (பருத்தி கம்பளி) காதில் போடப்படுகிறது.

மாற்று மருந்துகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு, காதுகுழாயின் ஒருமைப்பாட்டில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும், இல்லையெனில் வீட்டு சிகிச்சையானது சரிசெய்ய முடியாத தீங்கு விளைவிக்கும்.

குறிப்பு: காதில் வலி அல்லது அடைப்பு ஏற்படும்போது அதிகப்பட்சம் மருத்துவரை அணுகுவதே நல்லது. சுய மருத்துவம் செய்வது சில சமயங்களில் காதுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *